மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

 

திண்டுக்கல், டிச. 30: திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நேருஜி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர செயற்பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இம்முகாமில். 11, 12, 22, 27, 28 உள்ளிட்ட வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

அங்கிருந்த அதிகாரிகள் மனுக்களில் உள்ள பிரச்னைகளை கணினியில் பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுகுழு உறுப்பினர் அக்பர் , மண்டல தலைவர் ஜான்பீட்டர் ,வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன். மாமன்ற உறுப்பினர்கள் , செந்தில்குமார், பாரதி, மாரியம்மாள், 22 வது, வார்டுசெயலாளர் தன்ராஜ், துணைச் செயலாளர் முத்துசாமி, 12 வது வார்டு வட்ட செயலாளர் சிவா, அப்துல் ரகுமான் வார்டு பிரதிநிதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: