ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு

ஓசூர், டிச.28: ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. ஓசூர் மோரணபள்ளி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராகு, கேது, அதர்வண மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில், மார்கழி மாத பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் உள்ள ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதே போல், மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மங்கல ஆரத்தியும் நடந்தது. தொடர்ந்து மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. இதில், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

The post ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: