நடராஜர் ஆனந்த தாண்டவ நிகழ்ச்சி

பரமக்குடி, டிச.28: பரமக்குடி பெரிய கடை வீதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நடராஜர் ஆனந்த தாண்டவம் காட்சி கொண்டாடப்பட்டது. கோயில் மகா மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர் மீனாட்சி பிரியாவிடை மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து சிவனடியார்கள் பாடல்கள் பாடியபடி மூலவர் சன்னதியை சுற்றி வலம் வந்து கோயில் பிரகாரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் நிகழ்ச்சி காட்சிப்படுத்தப்பட்டதுடன் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜர் தரிசனம் செய்தனர். இக்கோயிலில் நாளை அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு நடராஜருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

The post நடராஜர் ஆனந்த தாண்டவ நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: