இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கிருஷ்ணன், முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அப்போது அவரிடம் பட்டா மாற்ற ரூ.30,000 லஞ்சமாக தங்கவேல் கேட்டுள்ளார். கிருஷ்ணன், தொகையை குறைக்கும்படி கேட்டதின் பேரில் ரூ.25000 லஞ்சமாக தர வேண்டும் என்று தங்கவேல் கூறியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணன், திருச்சி மாவட்ட லஞ்சஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை 5.30 மணியளவில் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்ற கிருஷ்ணன், அங்கிருந்த மண்டல துணை தாசில்தார் தங்கவேலிடம் ரூ.25000த்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் தங்கவேலை (51) கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக தங்கவேலிடம் விசாரணை நடந்து வருகிறது.
The post பட்டா மாற்ற ரூ.25,000 லஞ்சம் துணை தாசில்தார் கைது appeared first on Dinakaran.