சென்னை: சென்னை எண்ணூர் பகுதியில் இயல்புநிலை திரும்பியதால் மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். சட்டமன்ற உறுப்பினர் இல்லம் அருகே இருந்த அனைவரும் மீண்டும் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். உர ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தஞ்சமடைந்திருந்தனர்.