இந்தியாவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்வதை இஸ்ரேலியர்கள் தவிர்க்க வேண்டும்: இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தல்

டெல்லி: இந்தியாவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்வதை இஸ்ரேலியர்கள் தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே பயங்கர வெடி சப்தம் கேட்டது. தடயவியல் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வெடிபொருள் வெடித்ததற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ள போலீசார், இரண்டு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

The post இந்தியாவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்வதை இஸ்ரேலியர்கள் தவிர்க்க வேண்டும்: இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: