கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவ விழா

 

கரூர், டிச. 27: கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் ஆருத்ர தரிசன விழாவினை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ர தரிசன நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆருத்ர தரிசன மஹோற்சவ நிகழ்வை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் ரட்ஷாபந்தனம், ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவ நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.

தொடர்ந்து, டிசம்பர் 19ம் தேதி முதல் 25ம்தேதி வரை ஸ்ரீ மாணிக்கவாசருக்கு அபிஷேகம், நடராஜ மூர்த்திக்கு திருவெம்பாவை பாடி தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வான, திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஸ்ரீ அலங்காரவல்லி சவுந்திரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரா சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் நடைபெற்றது.

The post கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவ விழா appeared first on Dinakaran.

Related Stories: