‘கடையம் அருகே இன்று நடக்கவிருந்த மறியல் ரத்து

கடையம், டிச.27: திருமலையப்பபுரம் முதல் கோவிந்தபேரி வரை உள்ள சாலை பணியை தொடங்க கோரிசமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில்இன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தன. இது ெதாடர்பாக கடையம் காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் பர்னபாஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர், ரவண சமுத்திரம் மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசல் தலைவர் கனி, மஸ்ஜிதுல் ரஹீம் பள்ளிவாசல் தலைவர் செய்யதப்பா மற்றும் சாலை ஒப்பந்ததாரர் வினோத், ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, கடையம் காவல் நிலைய துணைஆய்வாளர் வேல்முருகன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இன்று முதல் உடனடியாக சாலை பணியை தொடங்கி இரண்டு மாத காலத்திற்குள் அமைத்து தருவதாக ஒப்பந்ததாரர் வினோத் ஒப்புக்கொண்டார். பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

The post ‘கடையம் அருகே இன்று நடக்கவிருந்த மறியல் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: