குழந்தைக்கு ஆடை எடுத்துக்கொண்டு ஹேமலதா திரும்ப வந்த போது, குழந்தையும், சம்மந்தப்பட்ட பெண்ணும் மாயமாகியிருப்பது கண்டு தாய் திடுக்கிட்டார். அழுது, புலம்பியபடி மருத்துவமனையின் பல இடங்களில் தேடினார். அப்போது மருத்துவர் எனக்கூறிய பெண் பக்கத்து வார்டில் குழந்தையுடன் நின்றிருந்தார். அவரிடம் சென்ற ஹேமலதா, என் குழந்தையை என்னிடம் கொடு எனக் கேட்டுள்ளார். அதற்கு உன் குழந்தை அழகாக உள்ளது. எனக்கு இந்த குழந்தை வேண்டும், இதற்காக உனக்கு ரூ.5 லட்சம் தருகிறேன்.
உன் கணவரிடம் கேட்டுச் சொல் எனக் கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஹேமலதா, தனது குழந்தையை அவரிடமிருந்து வாங்க முயன்றார். அப்போது அவரை தள்ளிவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பெண்ணிடம் இருந்த குழந்தையை வாங்கி, ஹேமலதாவிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அந்த பெண் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அடுத்த ஈயகுணம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி கோட்டீஸ்வரி (22) என்பதும், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரின் உறவினர் எனவும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கும்போதே அங்கு வந்த டாக்டர்கள் கோட்டீஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததாக கூறி அவரை அவசரமாக அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணைக்கு அனுப்ப மறுத்து சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
The post விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை திருட முயன்ற பெண்: ரூ.5 லட்சம் தருவதாக தாயிடம் பேரம் appeared first on Dinakaran.