பிரியாணி கடையில் வேலை செய்பவர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்காக, திருவள்ளூர் ஏரிக்கரையோரம் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்துள்ளார். அதேபோல் உரிமையாளர் அஜீஸ்அகமது தங்குவதற்கும் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வேலை அதிகமாக இருக்கும் போது இரவு நேரத்தில் அங்கு தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீகார் இளைஞர் உடல்நிலை சரியில்லாததால் உரிமையாளர் தங்கும் வீட்டில் படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜாவின் உடல் அருகே கிடந்த பளு தூக்கும் கருவியால் தலையில் தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எதற்காக பீகார் வாலிபர் கொலை செய்யப்பட்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவள்ளூர் அருகே பரபரப்பு பிரியாணி கடை ஊழியர் கொலை: நேபாள இளைஞர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.