டெல்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பாதுகாப்பில் இருந்த பலாத்கார குற்றவாளி ‘எஸ்கேப்’

புதுடெல்லி: டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியனா போலீசாரால் தேடப்பட்டு வந்த பாலியல் பலாத்கார குற்றவாளி அமந்தீப் சிங் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் பஹ்ரைனில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவருக்கு எதிராக ஏற்கனவே ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், அமந்தீப் சிங்கின் டெல்லி வருகை குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எப்) ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விமானத்தில் இறங்கிவந்த அமந்தீப் சிங்கை, உடனடியாக சுற்றிவளைத்து பிடித்தனர்.

சிஐஎஸ்எப் போலீஸ்காரர் ஒருவரின் பாதுகாப்பில் அவர் விமான நிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார். திடீரென சிஐஎஸ்எப் காவலர், அங்குள்ள கழிவறைக்கு சென்று வருவதற்குள், விமான நிலையத்தின் வருகைப் பிரிவு கவுண்டர் வழியாக அமந்தீப் சிங் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து டெல்லி விமான நிலைய போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசாரால் அமந்தீப் சிங் மீது பாலியல் பலாத்கார வழக்கு கடந்த 2020ல் பதிவு செய்யப்பட்டது. அப்போதே அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பாதுகாப்பில் இருந்த பலாத்கார குற்றவாளி ‘எஸ்கேப்’ appeared first on Dinakaran.

Related Stories: