மது விற்ற 11 பேர் கைது

தர்மபுரி, டிச.24: தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், அந்தந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, தர்மபுரி மற்றும் அரூர் உள்பட மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post மது விற்ற 11 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: