இதையடுத்து அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர். போராட்டத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பேசி முடித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் தலைவர்கள் பாதியில் பேச்சை முடித்து அந்த இடத்தில் இருந்து வெளியேறினர். இதில் மாநிலத் தலைவர் கே. சுதாகரன் உள்பட பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் டிஜிபி அலுவலகம் அருகே பல மணிநேரம் பரபரப்பு நிலவியது.
The post திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகம் அருகே பதற்றம்; காங்கிரஸ் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு: மாநில தலைவர் உள்பட பலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.