விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர், டிச.23: தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: