இந்த நிலையில், பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சங்க தலைவரானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாலியல் புகாரில் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி ஒப்படைப்பதாக பஜ்ரங் புளியா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்,” என காட்டமாக பதிவிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக மல்யுத்த போட்டியில் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பஜ்ரங் புனியா வென்றுள்ளார். பஜ்ரங் புனியாவிற்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
The post பிரிஜ்பூஷணின் விசுவாசியான சஞ்செய் சிங்கிற்கு எதிர்ப்பு.. பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவிப்பு!! appeared first on Dinakaran.