இதனைத் தொடர்ந்து அவரது தீவிர முயற்சியால் இப்பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க ரூ.1.07 கோடி ஒதுக்கப்பட்டு இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அதன்படி பெருமாள்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கேஜிஆர் வினோத் டவுன் நகரில் இருந்து முல்லை நகர் வரை 860 மீட்டர் தூரத்திற்கு ரூ.47 லட்சம், ஆர்ஜிபி நகர் பகுதி 2-ல் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க ரூ.61 லட்சம் என 2 இடங்களில் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை பூந்தமல்லி எம்எல்ஏ ஆ. கிருஷ்ணசாமி கலந்து கொண்டு புதிய சாலை அமைப்பதற்காக அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், நிர்வாகிகள் பரமேஸ்வரன், சௌந்தர்ராஜன், கௌரி கஜேந்திரன், ஜெயபுகழேந்தி, ஸ்ரீதர், எம்.சக்திவேல், நடராஜன், ஏழுமலை, கோபிகிருஷ்ணன், முகுந்தன், ராஜாராம், ராமச்சந்திரன், துரைராஜ், பேரோஷ், விக்னேஸ்வரன், ராதாகிருஷ்ணன், கண்ணன், சுரேஷ்பாபு, ராஜசேகர், கோபாலகிருஷ்ணன், பார்த்தசாரதி, பிரகாஷ், சுமன், ஜெகதீசன், ஜெகா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு, அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பெருமாள்பட்டு ஊராட்சியில் ரூ.1.07 கோடியில் சாலை அமைக்கும் பணி: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.