அதன்அடிப்படையில் செந்தில்குமார், காளிதாசன், தஞ்சன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்து 2009 செப்டம்பர் 30ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்னை, சிபிஐ வழக்குகளுக்கான கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து செந்தில்குமார், காளிதாசன், தஞ்சன் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தமாக ரூ.2 கோடியே 10 லட்சத்து 62 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
The post ரூ.2.6 கோடி கடன் வாங்கி மோசடி தனியார் நிறுவன நிர்வாகிகள் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.