அதை போலீசை வைத்து கவர்னர் அவிழ்த்தார். இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கவர்னர் ஆரிப் முகம்மது கான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறார். அரசியல் சாசன பணிகளை முறையாக செய்வதில்லை. அடிக்கடி புரோட்டோக்காலை மீறுவதால் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே ஆட்சிப்பணிகள் சுமூகமாக நடைபெற ஆரிப் முகம்மது கானை கவர்னர் பதவியிலிருந்து திரும்ப அழைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறி செயல்படும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் appeared first on Dinakaran.