சென்னை : |சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், 30 நாட்களுக்குள் சரணடைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம் கொடுத்துள்ளார். சரணடையாவிட்டால் தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறையை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.