பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்க ஆளுநர் ஒப்புதல்

சென்னை : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்க ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார். முன்னதாக பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறையை ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை செய்தார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை. 3 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி.பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததை அடுத்து அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்க ஆளுநர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: