டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் பொறுப்பு சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைக்கபட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு ஏற்கனவே டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாட்டை தொடர்ந்து பாதுகாப்பு பொறுப்பு சி.ஐ.எஸ்.எப். வசம் சென்றது.