கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு, டிச. 21: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கூமாப்பட்டி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி காளிதாஸ் தலைமை தாங்கினார்.முன்னாள் பேரூராட்சி தலைவர் சுந்தரம்,நகர செயலாளர் அய்யனார் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன்,தாலுகா செயலாளர் பெனரி, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயக்குமார், தாலுகா குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, ஜீவானந்தம் மற்றும் முருகன், பாலு, ஞானமுத்து, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கூமாபட்டி அழகர் மகன் ஓடையை தூர்வாரி இருபுறமும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: