அவ்வாறு நடத்த கூடிய ஜல்லிகட்டு போட்டியில் ஜாதிமத மோதல்காள் உள்ளது. எனவே இந்த போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிகட்டு போட்டியில் ஜாதி, மதத்தை புகுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. எனவே இந்த போட்டிகளை மதுரை மாவட்ட நிர்வாகமே இனி எடுத்து நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.