திண்டுக்கல் மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு

திண்டுக்கல், டிச. 17: திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி இருந்தவர் பாஸ்கரன். இவர் சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை தெற்கு துணை கமிஷனர் பிரதீப், திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய எஸ்பியாக பதவி ஏற்று கொண்டார். புதிய எஸ்பி பிரதீப் கோவையை சேர்ந்தவர்.

கோவையில் எம்பிபிஎஸ் படித்து முடித்த இவர், கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆனார். பின்னர் மதுரை, சேரன்மகாதேவி ஆகிய ஊர்களில் உதவி எஸ்பியாக பணியாற்றினார். தொடர்ந்து சென்னையில் துணை கமிஷனர், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி, மதுரை துணை கமிஷனராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திண்டுக்கல் மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: