சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை


திண்டுக்கல்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (22). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2021ல் 16 வயது சிறுமியை திருமணம் செய்தார். இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரில் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி நீதிபதி சரண் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சூர்யாவுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

The post சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: