அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மீண்டும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்க உள்ளார் ஸ்ரேயஸ்!

கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணியின் உரிமையாளர் அறிவித்துள்ளார். மேலும் கடந்த ஐபிஎல் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த நிதிஷ் ராணா துணை கேப்டனாக இருப்பர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் இன்று (வியாழன், 14 டிசம்பர்) ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தொடருவார் என்றும், நிதிஷ் ராணா துணை கேப்டனாக இருப்பார் என்றும் அறிவித்தார். அறிவிப்பை வெளியிட்டு அவர் கூறியதாவது: “காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐபிஎல் 2023-ஐ தவறவிட்டது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது.

அவர் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த சீசனில் நிதிஷ் ராணா கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். வரும் ஐபிஎல் தொடரில் துணை கேப்டனாக இருக்கும் நிதிஷ், கொல்கத்தா அணியின் நலனுக்காக ஸ்ரேயாஸை எல்லா வழிகளிலும் ஆதரிப்பார் என்பதில் சந்தேகமில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது: கடந்த சீசன் எங்களுக்கு பலவற்றை கற்றுக்கொடுத்தது. நிதீஷ் சிறப்பாக செயல்பட்டார். கொல்கத்தா அணியின் அவரை துணை கேப்டனாக நியமித்ததில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

The post அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மீண்டும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்க உள்ளார் ஸ்ரேயஸ்! appeared first on Dinakaran.

Related Stories: