மாநில நீச்சல் போட்டிக்கு கொங்கராயக்குறிச்சி பள்ளி மாணவர் தேர்வு

செய்துங்கநல்லூர், டிச. 14: கொங்கராயக்குறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் சஞ்சய், தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை சார்பில் கேம்ஸ் வில்லி அகாடமியில் நடைபெற்ற 50 மீட்டர் நீச்சல் போட்டியில் பேக் ஸ்டோக் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் சஞ்சயை பள்ளி தாளாளர் பால்ராஜ், நிர்வாக இயக்குநர் எபனேசர் சதீஷ் பால், மேரி ஷீபா, முதல்வர் சித்ரா, வகுப்பு ஆசிரியர் ராமன், உடற்கல்வி ஆசிரியர் காசிமணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post மாநில நீச்சல் போட்டிக்கு கொங்கராயக்குறிச்சி பள்ளி மாணவர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: