பல்லடம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே தகராறு

 

பல்லடம், டிச.13: பல்லடம் பஸ் நிலையத்தில் நேற்றிரவு பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ் டிரைவருக்கும், தாராபுரத்தில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ் டிரைவருக்கும் இடையே யார் முன்னே செல்வது என்ற பிரச்சனையில் தகராறு ஏற்பட்டது. 2 பஸ்களும் 5 நிமிட இடைவெளியில் செல்ல வேண்டும்.

இந்நிலையில், இருவருமே தாமதமாக வந்துள்ளனர். இதனால் கோவை செல்லும் பகுதியில் முதலில் பஸ் நிறுத்துவதற்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்த மற்ற பஸ் டிரைவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பல்லடம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே தகராறு appeared first on Dinakaran.

Related Stories: