காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

காஞ்சிபுரம்: குன்றத்தூர் தவ்ஹித் பள்ளிவாசலில், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில துணை தலைவர் பாரூக், செயலாளர் யாசீர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், மாநில பேச்சாளர் அப்பாஸ், மாவட்ட தலைவர் அக்ரம், துணை தலைவர் அசார், பொருளாளர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சாதி மத பேதமின்றி பொதுமக்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் அதிகப்படுத்த வேண்டும். மேலும், ரத்ததான முகாம்கள், அவசர ரத்ததானம், டெங்கு விழிப்புணர்வு, இலவச நிலவேம்பு கசாயம் விநியோகம் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளை அதிகப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர், மாவட்ட தலைமையின் கீழ் இயங்கும் கிளைகளின் சமூக சேவைகளின் அடிப்படையில் கோப்பைகள் வழங்கி ஊக்கப்படுத்தி, மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.

The post காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: