மேலும் நான் கட்டிய பணம், டிராக்டரை விற்பனை செய்த பணமும் வாங்கிய கடனுக்கு சரியாகிவிட்டதாக கூறி என்னை அனுப்பிவிட்டனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், நான் கடன் வாங்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை இப்போது விலைக்கு வாங்கி விட்டதாகவும், டிராக்டர் கடனுக்கான அசல், வட்டி ஆகியவை ரூ.36 லட்சம் ஆகிவிட்டதாகவும், கடனை தங்களிடம் கட்டவேண்டும் என அடிக்கடி செல்போனில் பேசி தொல்லை தருகின்றனர். அதோடு கடனை கட்டாவிட்டால் அடியாட்களை வைத்து என்னை தூக்கிக்கொண்டுபோய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி என்னுடைய நிலத்தை விற்பனை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post வங்கியை நாங்க வாங்கிட்டோம் ரூ.36 லட்சம் இப்போ கட்டு… விவசாயியை மிரட்டும் சென்னை தனியார் நிறுவனம் appeared first on Dinakaran.
