இதையடுத்து மூன்று பேரையும், அங்குள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, பெண் அதிகாரிகள் உதவியுடன் சோதனை செய்தனர். அப்போது 2 பெண் பயணிகள் உள்பட 3 பேரின் உள்ளாடைகள் மற்றும் கைப்பைக்குள் இருந்த ரகசிய அறைகள், எலக்ட்ரிக் ஓவன், டிரில்லிங் மிஷின் ஆகியவற்றுக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
3 பேரிடம் இருந்தும் 7.5 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.4.5 கோடி. தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து, சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் மூன்று பேருமே கடத்தல் குருவிகள் தான் என தெரியவந்துள்ளது. இவர்களை கடத்தலில் ஈடுபடுத்திய, சர்வதேச கடத்தல் கும்பலின் முக்கிய ஆசாமி யார், இவர்கள் இதேபோல் ஏற்கனவே தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
The post சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண்கள் உள்பட 3 குருவிகள் கைது appeared first on Dinakaran.