இதற்காக 119 பேரிடம் ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 31 பேரில் சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. சிபிசிஐடி சார்பில் விசாரணை அதிகாரி மருத்துவ விடுப்பில் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. உண்மை கண்டறியும் சோதனை குறித்து விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் விளக்கமளித்த பிறகே உரிய உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்று கூறி, மனு மீதான விசாரணையை வரும் டிச. 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.
The post வேங்கை வயல் வழக்கு டிச.21க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.