ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மனு அளிக்கும் போராட்டம்

 

தோகைமலை, டிச. 9: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த முயலும் ஒன்றிய அரசை கண்டித்து மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோகைமலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெருமாள், செல்வராஜ், பாலகிருஷ்ணன், ரெங்கசாமி, ஆசீர்வாதம் பங்குபெற்றனர்.

இதில் மின்துறையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் ஒன்றிய அரசு அதை திரும்பப்பெற வேண்டும். மேலும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இதேபோல் மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டங்களையும் கைவிடவேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்தனர். பின்னர் கோரிpக்கை மனுக்களை மின்துறை அதிகாரியிடம் வழங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மனு அளிக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: