இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சந்திரபாபுவும், ஜனா சேனா தலைவர் பவன்கல்யாணும் ரகசியமாக சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. எனவே வரும் ஆந்திர சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் சேராமல் சந்திரபாபு- ஜனசேனா கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். தெலங்கானாவில் காங்கிரசுடன் மறைமுகமாக அமைத்த கூட்டணியை போன்று, ஆந்திராவிலும் கூட்டணி அமைத்து, ஜெகன்மோகனையும், பாஜகவையும் தோற்கடிக்க சந்திரபாபு மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
The post `உதாசீனப்படுத்திய பாஜ இனி வேண்டாம்’ ஆந்திர தேர்தலில் ஜனசேனா- தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரபாபு நாயுடு ‘மாஸ்டர் பிளான்’ appeared first on Dinakaran.