இதையடுத்து ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். 4 விசைப்படகுகளில் சென்ற 21 மீனவர்கள் இலங்கையின் மன்னார் மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி அவர்கள் அனைவரையும் படகுகளுடன் கைது செய்தனர். இதில் 13 மீனவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். 8 பேர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரிடமும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் அவர்களது குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மொத்தத்தில் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மீனவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் கைதான மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
The post ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!! appeared first on Dinakaran.
