மில் அதிபருக்கு சொந்தமான 20 இடங்களில் ஐ.டி ரெய்டு

தேனி: தேனி நகர் மிராண்டா லைனில் வசித்து வருபவர் ஏஎம்ஆர்.சந்திரகுமார். இவருக்கு பருப்பு மில் அதிபரான இவருக்கு தேனியில் பைபாஸ் சாலை, பழைய ஜிஎச் ரோடு, சமதர்மபுரம், கொடுவிலார்பட்டி ரோடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பருப்பு மில்கள் உள்ளன. இவரது வீடு அருகே உள்ளது. இவர் வருமானவரி தாக்கல் செய்ததில் உரிய ஆவணங்களை மறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என வருமான வரித்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மதுரை மண்டல வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் மைக்கேல் ஜெரால்டு தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தேனியில் உள்ள ஏஎம்ஆர்.சந்திரகுமாருக்கு சொந்தமான வீடு, அவரது மேலாளர் கணேசன் வீடு, பைபாஸ் சாலை, ஜிஎச் ரோடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையில் ஈடுபட்டனர்.

The post மில் அதிபருக்கு சொந்தமான 20 இடங்களில் ஐ.டி ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: