காலிஸ்தான் பிரிவினைவாதி லக்பீர் பாகிஸ்தானில் மரணம்


புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதி லக்பீர் சிங் மாரடைப்பினால் பாகிஸ்தானில் காலமானார். அவருக்கு வயது 72. பஞ்சாபில் மோகா மாவட்டத்தில் உள்ள ரோட் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ரோட் என்று அழைக்கப்படும் லக்பீர் சிங் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் நேற்று இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பொற்கோயிலுக்குள் கொல்லப்பட்ட ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் மருமகன்ஆவார் .

The post காலிஸ்தான் பிரிவினைவாதி லக்பீர் பாகிஸ்தானில் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: