இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜியிடம் கேட்டபோது, ”மாணவ. மாணவிகளின் நலனை கருத்தில்கொண்டு குடிநீர் பிரச்னையை தீர்க்க பள்ளி வளாகத்தில் 1500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்தோம். பள்ளி நுழைவாயில் வழியாக போர்வெல் இயந்திரம் வரமுடியாத காரணத்தால் சுற்றுச்சுவரை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முடிந்ததும் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை மீண்டும் கட்டி விடுவோம். அதிலுள்ள வண்ண ஓவியங்களும் வரையப்படும் என்றார். புதுபொலிவுடன் இருந்த பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்க சுற்றுச்சுவர் இடிப்பு appeared first on Dinakaran.