திருச்சி பைபாஸ் கோடங்கிப்பட்டி பிரிவில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

 

கரூர், டிச. 2: கரூர் திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டி பிரிவு அருகே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு பகுதி உள்ளது. கரூரில் இருந்து ராயனூர் வழியாக திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோடங்கிப்பட்டி பிரிவுச் சாலையை கடந்து சென்றுவருகின்றன. இந்த பைபாஸ் சாலையில் நிமிடத்துக்கு நிமிடம் ஒய்வின்றி வாகனங்கள் மிக அதிக வேகத்தில் சென்று வருகின்றன.

இந்நிலையில் மற்ற பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முயலும்போது விபத்தில் சிக்கிக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் குகை வழிப்பாதை அல்லது உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பகுதியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இருந்தாலும் இதுவரை எந்தவித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே அனைவரின் நலன்கருதி கோடங்கிப்பட்டி பிரிவுச்சாலையின் குறுக்கே வாகன ஓட்டிகளின் நலன் கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

The post திருச்சி பைபாஸ் கோடங்கிப்பட்டி பிரிவில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: