டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் எம்.ஜி.ஆர் பங்களாவில் சூதாடிய 2 பேர் கைது

தில்லைநகர், டிச.2: திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் பங்களா உள்ளது, இப்பங்களாவில் நேற்று முன்தினம் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் அங்கு சென்று சீட்டு விளையாடிக் கொண்டிருந்த உறையூர் பணிக்கன் தெருவை சேர்ந்த ஹரி பிரசாந்த்(26) , உறையூர் பெருமாள் கோவில் தெரு முருகன் என்ற பந்தல் முருகன் (49) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரொக்க பணம் மற்றும் சூதாட்டத்திற்கு உபயோகப்படுத்திய சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிந்து காவல் நிலைய நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர்.

The post டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் எம்.ஜி.ஆர் பங்களாவில் சூதாடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: