முன்னதாக, துபாய் புறப்படுவதற்கு முன்பாக இதுகுறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘இந்தியா ஜி20 நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை வகித்தபோது பருவநிலை பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்த வகையில், பருவநிலை பாதுகாப்புக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது’ என்றார். துபாய் சென்றடைந்தபின் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘காப்28 மாநாட்டில் பங்கேற்பதற்காக துபாய் வந்தடைந்தேன். பூமியை சிறந்த கோளாக உருவாக்கும் இந்த மாநாட்டின் கருத்தரங்கில் பங்கேற்க ஆவலாக உள்ளேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். துபாயில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, இன்றிரவு டெல்லி திரும்புகிறார்.
The post உலக பருவநிலை பாதுகாப்பு மாநாடு: துபாயில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.