இந்தநிலையில் இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இது பக்கத்து வீட்டினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள் விரைந்து சென்று பார்த்து உள்ளனர். அப்போது ஒரு அறையில் ஆதி, ஆதில் ஆகிய 2 பேரும் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தனர். இன்னொரு அறையில் சுனுவும், சவும்யாவும் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். இதை பார்த்து பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆலப்புழா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
அதைத்தொடர்ந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டைக் குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த பிறகு கணவன், மனைவி 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post இரட்டைக் குழந்தைகளை கொன்று தம்பதி தூக்கு போட்டு தற்கொலை appeared first on Dinakaran.