இது குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் அன்பு கடந்த 2013ம் ஆண்டு புகார் கொடுத்தார். இதில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமினில் ரமேஷ் வெளியே வந்தார். இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து வந்தது. இந்தநிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குற்றவாளியான ரமேசுக்கு 6 மாத கால சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து குற்றவாளியான ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post பெண் வியாபாரியின் சகோதரரை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 6 மாத சிறை: செங்கல்பட்டு கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.