காந்தி சிலை உடைப்பு ஒருவர் கைது

கூடலூர்: தேனி மாவட்டம், கம்பம் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மகாத்மா காந்தியின் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இச்சிலையின் பீடத்தில் மர்ம நபர் ஏறி, அங்கு கட்டியிருந்த தேசியக்கொடியை பிடுங்கி தரையில் வீசினார். பின்னர் சிலையின் வலது கையை உடைத்து எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து கம்பம் நகர காங்கிரஸ் தலைவர் போஸ் கொடுத்த புகாரில், கம்பம் தெற்கு காவல்நிலைய போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கம்பம் மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் (45) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநோயாளி என தெரிந்தது.

The post காந்தி சிலை உடைப்பு ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: