இதற்கிடையே, செம்பரம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நாள்தோறும் மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி, ஏற்கனவே நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு, முதற்கட்டமாக 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று காலை 9 மணியளவில் 2ம் கட்டமாக கூடுதலாக 800 கன அடி உபரிநீர், ஏரியின் 16 மற்றும் 19 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்டது.
அந்தவகையில் தற்போது ஏரியிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நேற்று மாலை 4.30 மணிக்கு, கூடுதலாக மேலும் 500கன அடி திறக்கப்பட்டது. அதன்படி, தற்ேபாது விநாடிக்கு 1,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆகவே, அனகாப்புதூர் மற்றும் அடையாறு கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கையாக, செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பட்டுள்ளது.
The post தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,500 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.