இந்நிலையில் தம்பதி இருவரும் பவர் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி பூர்வார்டு ஊல்சனுக்கு சொந்தமான இடத்திற்கு ரூ.72 லட்சத்தை பெற்று மற்றொருவருக்கு விற்று மோசடி செய்ததாக ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப் பிரிவில் அவர் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்து வந்தது. சங்கரராஜன் சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவரது மனைவி விஜயலக்ஷ்மிக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
The post வெளிநாட்டுக்காரர் வாங்கிய நிலம் மோசடி பெண்ணுக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.