சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது. 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.