போதை பொருட்கள் விற்பனையை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

 

திருவள்ளூர்: அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் பேசியதாவது: அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா ஆகியவை மாவட்டம் முழுவதும் ஒரு கடையில் கூட இருக்கக்கூடாது. முக்கியமாக பள்ளிக்கூடம் அருகே விற்பனை செய்வதை கண்டறிய உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நேரடியாக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசி அங்குள்ள ஆசிரியர்கள் மூலமாக கடைகளில் ஆய்வு செய்து.

பான் மசாலா, குட்கா ஆகியவை கடைகளில் விற்பனை செய்வது கண்டுபிடித்தால் உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழ் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யவேண்டும். அதேபோல் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் வழங்கும் உணவு வகையில் தரமானதாகவும் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசின் சீரிய திட்டமான காலை உணவை தரமாக வழங்கவும், சரியான நேரத்தில் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன், இறைச்சி, காய்கறி கீரை வகைகள் போன்றவை கெமிக்கல் கலக்காமல் தரமாக வழங்கவும் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என உணவு பாதுகாப்பு துறை குழு உறுப்பினர்களான மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

The post போதை பொருட்கள் விற்பனையை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: