ஓரினச்சேர்க்கை வைத்தியரிடம் சிகிச்சை பெற்றது யார், யார்?: பட்டியலை தயார் செய்யும் போலீஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சோழபுரம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த அசோக்ராஜ் (27) என்பவரை சித்த வைத்தியர் கேசவமுர்த்தி (42) என்பவர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் கொலை நடந்தது தெரிய வந்தது. அசோக்ராஜ் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை தனித்தனியே அறுத்து வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை மற்றும் வீட்டினுள் மூலிகைச் செடி வளர்க்கும் இடங்களில் புதைத்துள்ளார். இதையடுத்து உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டது.

கேசவமூர்த்தி தமிமுன் அன்சாரி என்பவரின் மகன் முகமது அனாசுடன் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரையும் அசோக்ராஜ் போலவே கொன்று வீட்டின் பின்புறம் புதைத்திருக்கிறார். இருவரின் உடல் பாகங்களை மசாலா போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளார். இதனால், மேலும் பலரை கேசவராஜ் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில், தற்போது போலீசார் கேசவமுர்த்தியிடம் சிகிச்சை பெற்ற நபர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

The post ஓரினச்சேர்க்கை வைத்தியரிடம் சிகிச்சை பெற்றது யார், யார்?: பட்டியலை தயார் செய்யும் போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: