ஐதராபாத்: தேர்தல் நடந்து முடிந்துள்ள 3 மாநிலங்களில் இந்தியா கூட்டணி தோற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஐதராபாத்தின் துப்ரான் என்ற இடத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள விவசாயிகள், பெண்கள் உள்பட அனைவருமே காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். 3 மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தோற்கும். தெலங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியும், காங்கிரசும் ஊழல், மோசமான சட்டம்,ஒழுங்கு, மோசடி பணப்பரிவர்த்தனை ஆகியவற்றில் ஒரேமாதிரியானவை. இந்த கட்சிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.
The post தேர்தல் முடிந்த 3 மாநிலங்களில் இந்தியா கூட்டணி தோற்கும்: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.
